நிசப்தம்
நிறைந்த
இரவில்
எப்போதும் போல்
கண்சிமிட்டுகின்றன
நட்சத்திரஙகள்..
என்றோ
தொலைத்த
நினைவுகளை
நட்சத்திரங்கள்
மீட்டுக் கொடுக்கின்றன
கனவுகளின் வழியாய்..
தாத்தாக்களையும்
பாட்டிகளையும்
அம்மாக்களையும்
அப்பாக்களையும்
மனைவிகளையும்
அண்ணன்களையும்
அக்காக்களையும்
தம்பிகளையும்
தங்கைகளையும்
இன்னும்
எத்தனையோ
பிரிந்து சென்ற
உறவுகளை
நட்சத்திரங்களாகத்தான்
தேடிக்கொண்டிருக்கிறது
மனது..