“எப்பப்பா வந்த”
“நல்லா இருக்கையா”
எனக்
கேட்கும்
முகங்களால்
இன்னும் அழகாகிவிடுகிறது
ஊர்க்கனவு..
***********************************************
எப்போதோ கடந்து சென்ற
பொழுதுகளை
நினைக்கவைக்கிறது
பால்ய நண்பர்களின்
முகங்கள்..
**************************************************
எத்தனை தூரம்
பயணித்தாலும்
எப்போதும் மனதில்
படிந்திருக்கிறது
ஊர்க்கனவு
**************************************************
ஏனோத் தெரியவில்லை
பிடிக்காத வாத்தியார்
வீட்டை கடந்து
செல்லும் போதும்
அவரிடம்
பேச வேண்டுமென்ற
ஆர்வம்
துளிர்விட்டு விடுகிறது
***********************************************
பிழைப்பிற்காக
ஊர்விட்டு ஊரோ
நாடுவிட்டு நாடோ
சென்ற
பங்காளிகளையும்
நண்பர்களையும்
காணச்செய்யும்
திருவிழாக்கள்
அதீத
அழகாய் மிளிர்கின்றன
***********************************************
காதலியின்
வீட்டுத்
திண்ணையில்
அமர்ந்து
தேநீர்
பருகுவதும்
தியானம்தான்
***********************************************
அருமை