எத்தனை முறை
கிள்ளுகிறாய்
உன் பிரியங்ளை
கிள்ளலின்
வழியாய்
காட்டுகிறாய்..
அலுவலகத்தில்
எல்லோரும்
முகம் கண்டு
சிரிக்கும் பொழுது
பூரிக்கும் அன்பு
உன்னை நினைத்து ..
யாருக்கு எவ்வாறு
தெரியும்
உன் அன்பு
மழைச் சாரலில்
பூக்கும் ஒவ்வொரு
தருணங்களையும்
சேகரித்து வைப்பதற்காகவே
வாழ்ந்துவரும்
என் அன்பை .