பால்யம்

கருவேல மரத்தின் மீதும்
வேம்புவின் கிளையின்images(1) மீதும்
ஏறி விளையாடும்
அணிலாய்
பால்யம்.

தட்டான்களையும்
பொன்வண்டுகளையும்
ரசித்த பால்யம்..
வெய்யிலை
ருசித்த பால்யம்.

மழையோடு நனைந்த
பால்யம்
மலையோடு திரிந்த
பால்யம்..

தாத்தாக்களையும்
பாட்டிகளையும்
சுமந்த பால்யம்
அவர் அன்பில்
நனைந்த பால்யம்..

நரையோடிவிட்ட
இக்காலத்தில்
கரையோடும்
அலையாயுள்ள
பால்யம்.

One Response so far.

  1. உங்களை பார்த்தால் நரை ஓடிய பால்யம் தெரியவில்லையே நண்பரே! 😉

    ஆக்கம் அருமையாக உள்ளது.

    இந்த வலை பூவின் தலைப்பின்கீழ் உள்ள வரவேற்பு சிந்தனை முத்துக்கள் அற்புதமாக உள்ளன. நினைவில் நிற்கின்றன. பாராட்டுக்கள்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி தேவராஜ்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube