ஜன்னல் வழியாய்
பொன் ஒளியுடன்
உள் வருகிறது
சாம்பல் நிற
சிட்டுக்குருவியின் ஒலி..
நேற்றைய
துரோகத்தை
அதிகார
அத்துமீறலை
துஷ்பிரயோகங்களை
களைந்துவிடும்
என்ற நம்பிக்கையில்
ஜன்னல்
கதவை திறந்து
ஒளியை
ஒலியை
ரசிக்கிறேன்.
ஒலி(ளி)களிறெண்டும்
ஒழித்துவிட்டு
துளிர்விட
செய்கின்றன
அன்பான
கருணையை..