டைரி..

 
images(1)வீட்டை
சுத்தப்படுத்தும் போது
டைரி
கண்ணில் பட்டதாக
மனைவி தந்தபொழுது
டைரியில் தூசி
படிந்திருந்தது..
தூசியைத்
தட்டிவிட்டு
புரட்டிப்பார்த்தேன்..

 

தாத்தா
வாங்கிக் கொடுத்த
பேனா. .
பொன்வண்டிற்கு
“கல்யாணி” என
பெயர்வைத்து
அழைத்தது..
என தொலைந்த
பால்யம்
மீண்டும் உயிர்த்தது
டைரியில்..

என்னப்பா இது
எனக்கேட்கும்
மகனிடம் சொன்னேன்
“என் இறந்தகாலத்தின்
நிகழ்காலம் நீயென”.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube