வீட்டை
சுத்தப்படுத்தும் போது
டைரி
கண்ணில் பட்டதாக
மனைவி தந்தபொழுது
டைரியில் தூசி
படிந்திருந்தது..
தூசியைத்
தட்டிவிட்டு
புரட்டிப்பார்த்தேன்..
தாத்தா
வாங்கிக் கொடுத்த
பேனா. .
பொன்வண்டிற்கு
“கல்யாணி” என
பெயர்வைத்து
அழைத்தது..
என தொலைந்த
பால்யம்
மீண்டும் உயிர்த்தது
டைரியில்..
என்னப்பா இது
எனக்கேட்கும்
மகனிடம் சொன்னேன்
“என் இறந்தகாலத்தின்
நிகழ்காலம் நீயென”.