Posted by DevarajVittalan on Jan - 15 - 2019

வாழ்க்கையை பதிவு செய்யும் எந்த ஒரு கலையும் அற்புதமானதுதான். பதிவு செய்வது மட்டும் அல்லாமல், அந்த கலையின் வழியாய் சக மனிதர்களை யோசிக்க செய்யவும், வாழ்க்கையின் உன்னதத்தை புரிந்துகொள்ள வைக்கவும் இயலும் என்பதை தொடர்ந்து தனது செயல்பாடுகளால் நிறுபித்துவருபவர் மதுரை மைந்தன் அவர்கள். சமீபத்தில் வெளியான அவரது நிமிடமுள் குறும்படம் பார்த்தேன். இன்றைய அவசராகால உலகில் ஏழைமுதல், பணக்காரர்கள் வரை இரு சக்கர வாகனம் ஓட்டுவதென்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Aug - 16 - 2018

தண்ணி, தம்மு அடிக்காத ஆளு இப்படி திடீர்னு செத்து போயிட்டாரே என நமது அன்றாட வாழ்க்கையில் நிறைய நபர்கள் பேசுவதை கேட்டிருப்போம். நமக்கே தெரியாமல் நாம் அன்றாட உண்ணும் உணவுகளின் வழியாகவே நாம் சாவை நெருங்குகிறோம் என்பதை தெளிவாக கூறியுள்ளது இந்த குறும்படம். எளிய மனிதர்களின் மரணத்தை குடும்ப உறவுகள் கூட ஒரு வாரத்திற்குள் மறந்து விடுகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை. அதனாலோ என்னவோ தோழர் மதுரை மைந்தன் M.L.A
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jul - 26 - 2018

நல்ல குறும்படத்தின் இலக்கணம் என்ன என தேடினால் அந்தக் குறும்படத்தில் சொல்லப்பட்ட விசயம் ஒரே நேர்கோட்டோடு சென்று அதன் இலக்கை அடைவதே … நிசப்தம் குறும்படம் முதியவர்களின் கதையை பேசுகிறது. இப்பிரச்சனையை சொல்லும் பல திரைப்படங்களும், குறும்படங்களும், பாடல்களும், வசனங்களும் வந்திருந்தாலும் கூட; இன்னும் இப்பிரச்சனை முடிந்தபாடில்லை. சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். என் நண்பனின் பாட்டியை அங்கு சேர்த்திருக்கிறார்கள். அவர் எனக்கும் பாட்டிதான். சிறுவயதில் நண்பனோடு நான்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 29 - 2018

இலக்கியங்கள் வாழ்க்கையை நேசிக்கத்தான் கற்றுக்கொடுக்கின்றன. எப்போதும் பரப்பாகவும், வேகமாகவும் சென்றுகொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் மனிதப் பண்புகளைக்கொண்டு வாழ்வதே அரிதுதான். எங்கு பார்த்தாலும் வன்மம் தலைவிரித்தாடுகிறது. சில தினங்களுக்கு முன் , மகன் தன் தாயையே மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறான்; இன்னொருவன் தன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். எல்லாம் டிஜிட்டல் மையமான இந்த வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல கொலைகளும், கேவலமான விசயங்களும் நடந்து கொண்டுதானுள்ளது. வாழ்க்கை முட்களும், புதைகுழிகளும் நிறைந்த கொடூரமான ஒரு வழியில் பயணித்துக்கொண்டிருந்தாலும்; வாழ்க்கை
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Aug - 15 - 2017

எப்போதும் நல்ல படங்கள் நம் மனதில் உண்டாக்கும் சலனங்கள் அற்புதமானவை; ஒரு குளத்தில் எறியப்பட்ட கல் மூழ்கிவிடினும் அவை உண்டாக்கிய அதிர்வுகள் குழத்தில் அழகிய வரைபடத்தை உண்டாக்கிவிட்டு மறைகிறது, அப்படிப்பட்ட நற்சலனங்களை உருவாக்கும் படம்தான் THE FROZEN ROSE. படத்தில் ஒவ்வொரு காட்சியையும் கவிதையைப்போல் செதுக்கியுள்ளார்கள். நமக்கு பிரியமானவர்களை நாம் பிரிந்து போகும் போதும், நம்மை, நமக்கு பிரியமானவர்கள் பிரிந்துபோகும் போதும் உண்டாகும் துயரங்கள் சொல்லில் அடங்காதவை. தாய்பசுவைக் காணாமல்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Sep - 22 - 2012

சமீபத்தில் பார்த்த இந்த குறும்படம் மனதை நெகிழ செய்துவிட்டது. அற்புதமான குறும்படம் இரண்டரை மணிநேரம் ஒரு திரைப்படத்தில் சொல்லும் கருத்தை அழகாக தெளிவாக படம்பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குனர். இந்த அவசரகால வாழ்க்கையில் மனித நேயத்தை மறந்து பலர் வாழ்ந்து வருகிறார்கள், மனிதன் என்றால்சகமனிதர்களை நேசித்து வாழ வேண்டும் என்ற நெறியை படித்த நம்மில் பலரே அதை மறந்துவிட்டு வாழ்கிறோம். நமது அடுத்த தலைமுறைக்கு நாம் புத்தகங்களில் படித்த மனித நெறியை கூட
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 29 - 2011

சிறிய பட்ஜெட்டில் இயக்குனர் தான் கூறும் ஒரு வரி கதையை பத்து பதினைந்து நிமிடங்களில் சொல்லவேண்டும். இதற்கு திரைக்கதை நன்றாய் அமைந்திருக்க வேண்டும். பெரியமனுசி பதினைந்து நிமிடம் ஓடும் படம். வயோதிகர்கள், முதுமையில் கைவிடப்பட்ட மனிதர்கள், விதவைகள் என அவர்களின் வலிகளின் ஒரு துளியை குறும்படமாக தந்துள்ளார். மயானத்தில் படம் தொடங்குகிறது அரசாங்க அதிகாரி வந்து யார் பிணம் என வெட்டியானிடம் கேட்கிறார் அவன் செருப்பு தைக்கும் வேலாயி என்கிறான்.
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 29 - 2011

பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் நல்ல படங்களை பார்க்க சேனல்களை திருப்பினால் அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் ஆடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நல்ல படங்களை பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. இரண்டரை மணி நேரம் படம் பார்த்து இறுதியில் நமக்கு கிடைப்பது மனச்சோர்வுதான். இத்தகைய சூழ்நிலைகளில் மனது குறும்படங்களை தேடி சென்றது. குறும்படங்கள் விரைவில் முடியக்கூடியவை எந்த இடைவேளையும் இல்லை. நல்ல புரிதல்களை தரக்கூடியது . சமீபத்தில் சலகெருது – குறும்படம் பார்த்தேன்… காட்சிகள்
[ Read More ]Continue