Posted by DevarajVittalan on Dec - 25 - 2020

தனிமையில் இருக்கும் தன் வாழ்க்கையில், தனது கடந்தகால வாழ்வை நினைத்தபடியே வாழும் செங்காடனின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது, இந்த கல்லும், மண்ணும் நாவல். நிலத்தையும், நிலம்சார்ந்த நினைவுகளையும், தன்னுள்ளையே அசைபோட்டபடி வாழ்க்கையை கடந்துகொண்டிருக்கும் கதாபாத்திரம்தான் செங்காடன். செங்காடன் தான் நாவலின் முதன்மை கதாபாத்திரம். நேரடியான வர்ணனைகளை தவிர்த்து, கதாபாத்திரங்களின் வழியாய் ,புனைவை முதன்மை படுத்தி எழுதியுள்ளார் ஆசிரியர். கோவை நகரின் அருகில் வசிக்கும் விவசாயி செங்காடன், தனக்கென உறவுகள் எதுவுமின்றி
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on May - 17 - 2020
எல்லோருக்குள்ளும் எல்லாம் தெரிந்தவனும் எதுவும் தெரியாதவனும் இருக்கின்றான்.. சில நேரத்தில் எல்லாம் தெரிந்தவன் கர்ஜிக்கிறான்.. சில நேரத்தில் எதுவும் தெரியாதவன் மௌனித்திருக்கிறான்.. எல்லாம் தெரிந்தவனின் கர்ஜனையை யாரும் கேட்பதில்லை.. ஏனோ எல்லாம் தெரிந்தவனைவிட எதுவும் தெரியாதவனைத்தானே உலகம் நேசிக்கிறது..
Continue
Posted by DevarajVittalan on Jan - 13 - 2020

இலக்கிய வாசிப்பைத் தன் வாழ்வின் மூச்சாகவே கொண்டிருக்கும் தேவராஜ் விட்டலன், படைப்பிலக்கிய தாகத்தோடு பல ஆண்டுகளாக அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து கடுமையான உழைப்போடு முயன்று வருபவர். இணைகோடுகளான இந்த இரண்டு செயல்பாடுகளுமே இன்று அவர் எட்டியிருக்கும் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கின்றன.
Continue
Posted by DevarajVittalan on May - 4 - 2019

“ஓரமா போயி படுங்க”… “வார்டு வரண்டாவுல இப்படியா படுக்க கண்டோம்; ஆஸ்பத்திரில ஒரு சீக்காளிய அட்மிட் பண்ணிட்டு; குடும்பத்தோட அஞ்சாறு ஆளுக வந்து கெடக்குறது; நடந்து போறதுக்கு கூட பாதை இல்ல”… என ஸ்ட்ரெக்சரை தள்ளிக்கொண்டு ஒரு குண்டான நடுத்தரவயது பெண் எரிச்சல்பட்டு சப்தமிடுவதைக்கேட்டு ஆஸ்பத்திரி வரண்டாவில் படுத்துக்கொண்டிருந்த முனியாண்டி தூக்கம் களைந்துபோய் கண்விழித்தபோது ,நேரம் அதிகாலை நான்கு மணி ஆகியிருந்தது. ”நேத்து டூயிட்டில இருந்த பொம்பளயெல்லாம் இப்படி
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 6 - 2018

ஹாச்சூ நதி சலனமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. நதிக்கரையில் புளுபப்பி மலர்கள் அழகாய் பூத்திருக்கின்றன. புளுபப்பி மலர்களின் வண்ணங்களால் நதிக்கரை மேலும் அழகாக தெரிகிறது. எங்கள் இராணுவ முகாம் நதிக்கரையின் அருகில் உள்ள மேட்டில்தான் அமைந்திருக்கிறது. அறையிலிருந்து பார்த்தால் ஹாச்சூ நதியில் மீன்பிடிப்பவர்கள், புளுபப்பி மலர்களை பரித்துச்செல்பவர்களென நதிக்கரையில் மனிதர்கள் நடமாடுவது தெரியும். அந்த அழகிய நதியை கடக்க இராணுவத்தினர் இரும்பிலான பாலம் அமைத்திருந்தனர். பாலத்தில் பூட்டான் வாசிகள் பலவண்ணங்களைக் கொண்ட
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Aug - 6 - 2018

இரயில் “பபினா” ஸ்டேசனை வந்தடைந்த பொழுது ஆகாசமெங்கும் மஞ்சள் பூத்திருந்தது; ஜன்னலின் வெளியே “வெக்கை மிதந்துகொண்டிருந்தது”; இரயில் நிலையத்தின் அருகில் உள்ள பூங்காவில் மஞ்சள் அரளிப்பூக்கள் அழகாய் மலர்ந்திருந்தது: வெக்கை ஏறியிருக்கும் மரப்பலகையில் படிந்திருக்கும் தூசியை பிஞ்சுக்கரங்களால் துடைத்துவிட்டு ஊஞ்சலாடிக்கொண்டிருந்தாள் சிறுமி. வெள்ளை நிறத்தில் ரோஜா பூ எம்ராய்டிங் பொதிந்த ஆடை அணிந்திருந்தாள். இரயில் மெல்ல நகரத்துவங்கியது. என் கண்கள்; பூங்காவையும் குழந்தையையும் “கண்களைவிட்டு மறையும் வரை” பார்த்துக்கொண்டேயிருந்தது. இராணுவத்தில்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Nov - 24 - 2017

உயிர் எழுத்து அக்டோபர் மாத இதழில் காஷ்மீரியன் சிறுகதை வெளிவந்தது ; எனது தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியிட இயலவில்லை அந்த சிறுகதை எனது காஷ்மீர் அனுபவங்களை வைத்து எழுதினேன் .
Continue
Posted by DevarajVittalan on Nov - 20 - 2017

வான்கா என்ற சிறுவனின் ஏக்கம் நிறைந்த கடிதம் நூறாண்டுகள் கழித்தும் மனதை நெகிழச்செய்கிறது … பனிபடர்ந்து கொண்டிருக்கும் இவ்விரவை அந்தோன் சேகவ் கருணையினால் நிரப்பிச்செல்கிறார். அந்தோன் சேகவ் மனம் நிறைய நிறைந்துள்ளார்… படித்துப்பாருங்கள்..
Continue
Posted by DevarajVittalan on Jun - 11 - 2017

வெய்யில் உக்கிரமாயிருந்தது, கத்திரி வெய்யில் ஆரம்பித்திருந்தது. வட இந்திய வெய்யில், டெல்லி வெய்யில் எனக்கூடச் சொல்லலாம். நம்மூர் வெய்யிலைக்காட்டிலும் சற்றுக் கூடுதல்தான். சும்மா அமர்ந்திருந்தாலும் உடம்பில் எண்ணெய் ஊற்றிவிட்டது போன்ற ஒரு பிசுபிசுப்பு வந்துகொண்டேயிருக்கும், வற்றாத ஆறுபோல. யுவராஜ் ஜான்ஸி வந்து சில வாரங்கள்தான் ஆகியிருந்தது. பள்ளிக்கூடத்தில் ஜான்ஸிராணி லச்சுமிபாய் பற்றிப் படிக்கும்பொழுது மனதில் பெரும்மனக்கிளர்ச்சி உருவாகி வந்தது உண்மைதான், ஆனால் இப்போது இங்கு அடித்துக் கொண்டிருக்கும் வெய்யில், அந்த
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 15 - 2015

அங்குமிங்குமாய் சோடியம் விளக்கின் ஒளி பேருந்து நிலையமெங்கும் விரவியிருந்தது. மார்கழி பிறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது குளிர். குளிருக்கான குல்லா விற்ப்பவர்கள் எல்லாப் பேருந்துகளிலும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் புகைத்துக் கொண்டிருந்தனர். புகை வானில் திட்டு திட்டாய் உருவங்களை உண்டாக்கியவாறு பறந்து சென்றுகொண்டிருந்தது. மணி சரியாய் இரவு பத்து ஆகியிருந்தது , இப்போது வண்டி ஏறினால் உத்தேசமாய் காலை மூன்று மணிக்குள் மதுரையில் இருக்கும் வீட்டிற்கு
[ Read More ]Continue