Posted by DevarajVittalan on Apr - 7 - 2016

வாழ்க்கையில் பலதரப்பட்ட எண்ணங்களை கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் . தனிமனிதன் என யாரும் இல்லை, அனைவரும் சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கொருவர் பினைந்துதான் உள்ளோம்.ஏமாற்றங்கள், பெருந்துயரங்கள் , சந்தோசங்கள் என காலம் மாறிமாறி அனைவரின் வாழ்விலும் இனிப்பையும் கசப்பையும் தந்து கொண்டுதான் உள்ளது. பலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள இயலாமல் வாழ்வை சுருக்கி கொள்கின்றனர். சிலர் பிரச்சனைகளில் இருந்து மீண்டு
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Mar - 16 - 2014

அசடன் நூலை ( நாவலை ) கடந்த ஒரு வருடமாக தூக்கிக் கொண்டு திரிந்த எனக்கு அந்நாவலை முழுமையாக உணர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பல நாட்களாக இருந்து வந்தது. பனி விழுந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் ஜனவரி மாத இறுதியில் அசடன் நவலை படிக்கத் துவங்கினேன். அனைவரையும் நேசிக்கவும், தனக்கு துன்பம் தருபவர்களை மன்னிக்கவும், எளிமையான சாந்தமான குணத்தோடும் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட மிஷ்கின் தனது அதீதமான உணர்ச்சிகளின்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 24 - 2014

“ பயணம் ” என்ற வார்த்தையே மிக உன்னதமான சிறப்பு பெற்ற வார்த்தை எனக் கருதுகிறேன். பயணம் இல்லையயனில் எந்த ஒரு செயலும் முழு வடிவம் பெறுவதில்லை. நதிகளின் பயணம் எத்தனை எத்தனை வறண்ட நிலங்களை செழுமையாக்குகின்றன. சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் பயணம் தானே அவரது புரட்சி வாழ்வில் பல முக்கிய எண்ணங்களை கொண்டு சேர்த்தது. அத்தகைய பயணத்தைப் போன்று மிகவும் சிறப்பானதொரு பயணம்தான் முன்னாள் குடியரசுத் தலைவர்,
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jul - 31 - 2013

புத்தக வாசிப்பில் நுழைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட பின், மிகவும் தாமதமாகத்தான் வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துகளை கண்டு வாசித்து மகிழ்ந்தேன். எனது ஊருக்கு மிகவும் அருகில் இருப்பவர், இருந்தும் இவ்வளவு தாமதமாகத்தான் அந்த மாபெரும் எழுத்தாளுமையை கண்டடைய முடிந்தது.
Continue
Posted by DevarajVittalan on Jul - 9 - 2013

கதைகள் வெறும் கதைகள் மட்டுமன்று, அவை வாழ்வின் சாரத்திலிருந்து எடுத்துச் சொல்லும் ஒரு ஆவணமாகும். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பர் ஒரு நல்ல வாசகர். அவரது அறையில், புத்தகங்கள் நிறைய வைத்திருந்தார். அந்த புத்தகங்களில் இருந்து கதை நிலம் என்ற புத்தகம் என்னை கவர்ந்தது அந்த புத்தகத்தின் முகப்பு அட்டையில் மணமகன், மணமகள் என்ற பெயர்களை அச்சிட்டு இருந்தார்கள். ஒரு திருமண விழாவிற்கு இந்த புத்தகத்தை அச்சிட்டு
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Aug - 25 - 2012

கதாபாத்திரங்கள் :- சம்பு சாஸ்த்திரி – குடும்பத்தலைவர் (நாவலின் முக்கியமான கதா பாத்திரம்) நல்லான் – சம்பு சாஸ்த்திரியின் பணியாளன் சாவித்திரி – சம்பு சாஸ்த்திரியின் மகள் (நவலின் நாயகி) உமாராணி – சாவித்திரியின் மறு பெயர் மங்களம் – சம்பு சாஸ்த்திரியின் மனைவி சொர்ணம்மாள் – மங்களத்தின் தாய் தங்கம்மாள் – சாவித்திரியின் அத்தை ராஜாராமய்யர் – சாவித்திரியின் மாமா நீண்ட நாட்களாக அமரர் கல்கி
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jul - 10 - 2012

சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் சேவல்கட்டு நாவலை வாங்கினேன். சேவல்கட்டு என்ற பெயரை படித்தவுடனேயே புத்தகத்தின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. சி.சு. செல்லப்பா அவர்கள் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் நாவலை எழுதியது போல, ம. தவசி அவர்கள் சேவல் சண்டையை மையமாக வைத்து சேவல் கட்டு நாவலை படைத்துள்ளார். எழுபது வயதான போத்தையாவின் வழியில் பயணிக்கிறது நாவல். போத்தையா சேவல்கட்டுக்கு ஏற்ற சேவலை தேடி
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Mar - 11 - 2012

தமிழாக்கம் – எஸ். கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரங்கள் அதுல் – இளைஞன் , ஞானதாவின் முறைப்பையன் ஞானதா – பதினான்கு வயது சிறுமி, பிரியாநாத் – துர்க்கா மணி – மகள் மாதுரி – அநாத் நாத்தின் மகள் கோலாக் நாத் – சுவர்ண மஞ்சரி (கணவன் மனைவி) கோலாக் நாத் இறந்து விடுகிறார். பிரியாநாத் – துர்க்கா மணி அநாத் நாத்- இவரது மனைவியின் பெயர் குறிப்பிட படவில்ல , சிறிய ஓரகத்தி
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 12 - 2012

டெல்லியின் குளிர் நிறைந்த இந்த காலங்களில், பனி சூழ்ந்த ஒரு இரவில் யானை டாக்டர் சிறுகதையை வாசிக்கலானேன். கதையினுள் இயல்பாய் பயணிக்க முடிந்தது, கதையினுள் செல்ல செல்ல ஏதோ அடர்ந்த கானகத்தினுள் பயணிப்பதை போன்ற உள்ளுணர்வு உண்டாகியது. பறவைகளின் சப்தங்களும், யானையின் பிளிறல்களையும் வாசிப்பின் வாயிலாக கேட்க முடிந்தது. இக்கதையின் வாயிலாக சமகால வாழ்க்கையில் இயற்கையின் மீது நாம் கொண்டிருக்கும் அவதானிப்பு என்ன என்பதை ஒவ்வொருவாசகனையும் சிந்திக்க வைக்கிறார். ஆசிரியர்.
[ Read More ]Continue