Posted by DevarajVittalan on Dec - 15 - 2019

தன்மீதுச் செல்லும் இரயில்சக்கரங்களின் சுமையை புன்னகைத்துக்கொண்டே ஏற்றுக்கொண்டு வெய்யிலிலும் பனியிலும் மழையிலும் இருப்பு கொண்டிருக்கின்றன.. மாநில பேதமின்றி அனைவரையும் தன் இரும்பு தேகத்தால் கட்டி இணைக்கின்றன..
Continue
Posted by DevarajVittalan on Dec - 14 - 2019

இரயிலோடிச் செல்லும் தண்டவாளத்தின் மீதும் தன் வண்ணச் சிறகைச் சிலுப்பி அமர்ந்து செல்கிறது ஒர் பட்டாம்பூச்சி.. ********* பிரிவென்பது புரிதலின் ஆரம்பம்தானே! ********** இடம்பிடித்து ஜன்னலிருக்கை கிடைத்து நடை மேடையில் ரொட்டிகளை அழகாக கொத்தி தின்னும் மைனாக்களைப் பார்ப்பது ஆனந்தம் பேரானந்தம்! ************
Continue
Posted by DevarajVittalan on Dec - 14 - 2019

சில தினங்களுக்கு முன்பு மதுரையில் இருக்கும் புத்தக கடைகளில் “ நீலகண்ட பறவையைத் தேடி என்ற வங்க நாவலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தேன். இரயில் நிலையத்தில் எதிரில் உள்ள மல்லிகை புத்தக கடை , இலக்கியப் பண்ணை, கோவில் வீதியில் உள்ள நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்” என எனக்குத் தெரிந்த புத்தக கடைகளில் தேடினேன். கிடைக்கவில்லை… பின் தங்க ரீகல் தியேட்டர் முன் உள்ள
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 4 - 2019

வாழ்க்கையை தத்ரூபமாக, விரிவாக எடுத்துரைக்க எழுத்தின் வடிவநிலைகளில் நாவல்வடிவமே மிகவும் ஏற்றது . சில மாதங்களுக்கு முன் எம்.ஏ.சுசீலா அம்மா பல புத்தகங்களை எனக்களித்தார். நல்ல புத்தகங்களைத்தேடித்தேடி வாசிக்க நினைக்கும் என் ஆழ்மனதின் ஏக்கத்தை உணர்ந்தவர் அம்மா. அவர்கள் கொடுத்த புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமிருப்பினும், அலுவலக நெருக்கடிகள் காரணமாக வாசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் அம்மா கொடுத்த புத்தகங்களில் சாகித்திய அக்காதெமி விருது
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 4 - 2019

எல்லோருக்குள்ளும் ஒரு சுவர் உண்டு சுவர்கள் நம்மை புறத்திலிருந்து பாதுகாக்கத்தான் அச்சுவர்களே அழிக்கும்சுவர்களாகி எளிமையானவர்கள் இப்போது இல்லாமல் போனார்கள்..
Continue
Posted by DevarajVittalan on Nov - 29 - 2019

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. ` என்ற குறளின் பொருளுக்கேற்றார்போல் , தான் கற்றுக்கொண்ட நூல்கள் பற்றியும் , தன்னுள் எழும்பிய சமுதாயக்கருத்துக்களையும் “ நவில்தொறும்” என்ற இந்தப் புத்தகமாக நமக்கு கொடுத்துள்ளார் ஆசிரியர் எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள். வாசிப்பின் முதல்படியில் இருக்கும் தோழர்களுக்கு இந்தப்புத்தகத்தின் வாயிலாக பல புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்ள இயலும். புத்தகத்திலுள்ள பத்தொன்பது கட்டுரைகளில் எவற்றையும் தவிர்க்க இயலாது வாசிக்க
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Nov - 23 - 2019

இரயில் பயணங்கள் எப்போதும் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தையும் , தரிசனத்தையும் தந்துகொண்டுதான் உள்ளது. அரோணி எக்ஸ்பிரஸில் வெஸ்ட்பெங்காளிலிருந்து ஊருக்கு திரும்புகையில் இரண்டாம் வகுப்பில் பயணித்துக்கொண்டிருந்தேன். கோச் முழுவதும் அதீதமான கூட்டம் நிரம்பியிருந்தது. பதின்பருவ இளைஞர்கள்தான் அதிகம் இருந்தனர். அந்தக்கூட்டத்தில்தான் சுதீப்பை சந்தித்தேன். சுதீப் மேற்குவங்கத்தைச்சேர்ந்தவன். பணிக்காக திருவணந்தபுரம் செல்கிறான். அவனோடு பேசியதில் அவனொரு பெயிண்டர் என்பதை அறிந்துகொண்டேன். உயரமான கட்டிடங்களுக்கு வர்ணம் பூச நம்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Sep - 26 - 2019

விடுமுறைக்கு வந்து செல்லும்போது , பிரிவின் வலியை போக்குவதும் : வாழ்வின் மீதான நம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்வதும் புத்தகங்களே ஆகும். இம்முறை விடுமுறையில் மதுரைப் புத்தகத்திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகத்தில் தேவமலர் புத்தகத்தை வாங்கினேன். தேவமலர் குறுநாவலின் சிறப்புகளை ஏற்கனே அறிந்துள்ளதால் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் புத்தகம் வாங்கிய நாள் முதலே தொற்றிக்கொண்டது. சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் கோரமண்ட்டல் எக்ஸ்பிரஸில் ஜென்னலின் அருகே அமர்ந்து படிக்கத்துவங்கினேன். படிக்க
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Sep - 23 - 2019

“மதுரையில் மழைத்தூரும் வானம் மனதில் பார்க்க நினைத்த பார்த்திபன் படம் வசனம் பார்த்திபனிடம் வசப்பட்டத்தருணமது”.. திரையில் ஒரே ஆளாக வந்து, நம்மை இரண்டுமணி நேரம் இருக்கையிலேயே கட்டிப்போட்டுவிடுகிறார். திரையில் அவர் மட்டுமே வந்தாலும் , குரல்களாக வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் நடித்ததுபோன்றே இருந்தது.
Continue
Posted by DevarajVittalan on Jun - 17 - 2019

ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், ‘இது மனித இயல்புகளைப் பற்றிய அரிதான ஆவணம் ‘ என்றே கூற வேண்டும் – கோபிகிருஷ்ணன் நாவலை படித்துவிட்டு அமைதியாய் என் அறை முன்பிருக்கும் பழமையான ஆலமரத்தின் விழுதுகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்; ஆலமர விழுதுகள் பூமியை அணைத்து ஒன்றாகி உட்சென்று மரத்தை கம்பீரமாக தாங்கி நிற்பது போல்.. மனித மனதை பல நிலைகளிலிருந்து உட்சென்று ஆராய்கிறார் தஸ்தயெவ்ஸ்கி ; என் மனமெங்கும் தஸ்தயெவ்ஸ்கியே நிறைந்திருந்தார். நான்
[ Read More ]Continue