ஒவ்வொரு
மலரையும் சேர்த்து தொகுப்பதை
மாலை என்றால்..
ஒவ்வொரு நூலை
சேர்த்து தொகுப்பதை
ஆடை என்றால்..
ஒவ்வொரு உலோகங்களை
சேர்த்து தொகுப்பதை
தங்கம் என்றால்..
ஒவ்வொரு வார்த்தைகளை
சேர்த்து தொகுப்பதை
கவிதை என்றால்..
ஒவ்வொரு கவிதைகளை
சேர்த்து தொகுப்பதை
புத்தகம் என்றால்..
ஒவ்வொரு வண்ணங்களை
சேர்த்து தொகுப்பதை
ஓவியம் என்றால்..
ஒவ்வொரு மழைத்தூரல்களை
சேர்த்து தொகுப்பதை
ஆறு என்றால்..
ஒவ்வொரு அன்பையைம்
சேர்த்து தொகுத்தால்
அம்மா என்பேன்..
ஒவ்வொன்றோடு
ஒன்றும் போது
ஒன்றாகிவிடுகிறது..
ஒன்றின் அர்த்தங்கள்
கோடியாகிவிடுகிறது..
ஒன்றை கோடியாக்கிப்
பார்த்தாலும்..
கோடியை ஒன்றாக்கிப்
பார்த்தாலும் நீ
ஆகிறாய் ..
நல்ல கவிதை. அம்மா – அன்பின் மொத்த உருவம்….