தொலைதூரத்தில்
இருந்தாலும்
இரயில் தண்டவாளத்தில்
காதுவைத்து கேட்கும்பொழுது
கேட்கிறது
நம் கிராமத்து
தாயின் தாலாட்டுப் பாட்டு!
**********
எல்லா ஊர்களையும்
தொட்டுச் சென்று
பின்னி பிணைந்திருக்கும்
இத்தண்டவாளத்தில்
என் ஊர் விவசாயின்
பாதமும்
படிந்திருக்கும்…
**********