தன்மீதுச் செல்லும்
இரயில்சக்கரங்களின்
சுமையை
புன்னகைத்துக்கொண்டே
ஏற்றுக்கொண்டு
வெய்யிலிலும்
பனியிலும்
மழையிலும்
இருப்பு
கொண்டிருக்கின்றன..
மாநில
பேதமின்றி
அனைவரையும்
தன் இரும்பு
தேகத்தால்
கட்டி
இணைக்கின்றன..
தன்மீதெறியும்
அனைத்தையும்
ஏற்றுக்கொள்ளும்
தண்டவாளம்போல்
மனம்வேண்டும்
மனிதர்களுக்கு..