Posted by DevarajVittalan on Jun - 11 - 2017

வெய்யில் உக்கிரமாயிருந்தது, கத்திரி வெய்யில் ஆரம்பித்திருந்தது. வட இந்திய வெய்யில், டெல்லி வெய்யில் எனக்கூடச் சொல்லலாம். நம்மூர் வெய்யிலைக்காட்டிலும் சற்றுக் கூடுதல்தான். சும்மா அமர்ந்திருந்தாலும் உடம்பில் எண்ணெய் ஊற்றிவிட்டது போன்ற ஒரு பிசுபிசுப்பு வந்துகொண்டேயிருக்கும், வற்றாத ஆறுபோல. யுவராஜ் ஜான்ஸி வந்து சில வாரங்கள்தான் ஆகியிருந்தது. பள்ளிக்கூடத்தில் ஜான்ஸிராணி லச்சுமிபாய் பற்றிப் படிக்கும்பொழுது மனதில் பெரும்மனக்கிளர்ச்சி உருவாகி வந்தது உண்மைதான், ஆனால் இப்போது இங்கு அடித்துக் கொண்டிருக்கும் வெய்யில், அந்த
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 15 - 2015

அங்குமிங்குமாய் சோடியம் விளக்கின் ஒளி பேருந்து நிலையமெங்கும் விரவியிருந்தது. மார்கழி பிறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது குளிர். குளிருக்கான குல்லா விற்ப்பவர்கள் எல்லாப் பேருந்துகளிலும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் புகைத்துக் கொண்டிருந்தனர். புகை வானில் திட்டு திட்டாய் உருவங்களை உண்டாக்கியவாறு பறந்து சென்றுகொண்டிருந்தது. மணி சரியாய் இரவு பத்து ஆகியிருந்தது , இப்போது வண்டி ஏறினால் உத்தேசமாய் காலை மூன்று மணிக்குள் மதுரையில் இருக்கும் வீட்டிற்கு
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Nov - 23 - 2014

நீண்டு வளர்ந்திருக்கும் தேவ்தர், யாரிகுல், சினார் மரங்களையும், சினார் மரத்தின் அழகிய இலைகளையும், வளைந்து வளைந்து செல்லும் அழகிய நதிகளையும், மலைகளில் படிந்திருக்கும் பனிகளையும், வானில் சுதந்திரமாக எவ்வித எல்லைக் கட்டுப்பாடுகளின்றி பறந்து கொண்டிருக்கும் பறவைகளையும், பறவைகள் எழுப்பும் இனிய சப்தங்களையும், வண்ண வண்ண மலர்களையும் பார்த்து, மகிழ்ந்து இயற்கையின் அழகை வியந்து ரசித்துக் கொண்டிருந்தான் ஹேமந்த். காஷ்மீரில் இருக்கும் அழகிய பனி படர்ந்திருக்கும் மலைகளை பார்க்கும் போதெல்லாம் ஹேமந்தின்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Oct - 11 - 2013
நிசப்தம் நிறைந்த இரவில் எப்போதும் போல் கண்சிமிட்டுகின்றன நட்சத்திரஙகள்.. என்றோ தொலைத்த நினைவுகளை நட்சத்திரங்கள் மீட்டுக் கொடுக்கின்றன கனவுகளின் வழியாய்.. தாத்தாக்களையும் பாட்டிகளையும் அம்மாக்களையும் அப்பாக்களையும் மனைவிகளையும் அண்ணன்களையும் அக்காக்களையும் தம்பிகளையும் தங்கைகளையும் இன்னும் எத்தனையோ பிரிந்து சென்ற உறவுகளை நட்சத்திரங்களாகத்தான் தேடிக்கொண்டிருக்கிறது மனது..
Continue
Posted by DevarajVittalan on Aug - 9 - 2013
செம்பருத்தி பூக்களும், ரோஜா பூக்களும், வேப்ப மரங்களும் , அரச மரங்களும் நிறைந்திருந்த அந்த அழகிய பூங்காவில், ஊஞ்சல்களிலும், சருக்குப் பலகைகளிலும், விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை காணும் பொழுது சுனிலுக்கு மனதிலொரு சந்தோசமும், அமைதியும் பிறந்தது. எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நகரத்தில் சுனிலுக்கு இருந்த ஒரே ஆறுதல் அந்த சிறிய பூங்கா ஒன்றுதான், பூங்காவில் இருந்து பார்த்தால் கடைசியாக அம்மா வாழ்ந்த வீடு தெரியும், குறிப்பாக அந்த வீட்டின்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jul - 7 - 2013

மழை இன்னும் விட்டபாடில்லை, மாடியிலிருக்கும் ஜன்னல்கதவினை திறந்துவிட்டான் குபேரன், மேற்கிலிருந்து வந்த குளிர்க்காற்று அவனது முகத்தை இதமாக வருடிச் சென்றது, அந்த ஸ்பரிசம் அவனுக்கு பிடித்திருந்ததினால் சிறிது நேரம் ஜன்னல் வழியாகத் தெரியும் இருண்ட ஆகாசத்தை பார்த்துக் கொண்டேயிருந்தான். பக்கத்தில் இருக்கும் குளத்திலிருந்து வரும் தவளைகளின் சப்தம் குபேரனின் காதில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மழை ஆக்ரோசமாக விடாமல் “ச்சோ” வென பெய்து கொண்டிருந்தது ஊரே இருளில் மூழ்கியிருந்தது, வானில்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Apr - 2 - 2013

மழை விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது, எங்கு பார்த்தாலும் அழுகைச் சப்தம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.அடி பாதகத்தி தொண்ணூறு வயசுலையும் கல்லு மாதிரி நான் இருக்கையில, அடி நாயே நீ இப்படி பாதியிலேயே போய் சேந்துட்டேயேடி என் ராசாத்தி..நீ அரளிப் பூ வச்சா அல்லிராணியாட்டம், செவ்வந்தி பூ வச்சா செங்கமலமாட்டம்.. மல்லிக பூ வச்சா மந்த மாரியாட்டம்.. என ஓங்காரமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் கருப்பாயி பாட்டி… தெருவெங்கும் செகதியாய்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Feb - 17 - 2013

நிசப்தம் நிறைந்த இரவில் இரவை வெளிச்சமாக்கும் பறவையைக் கண்டேன்.. பறவையின் இறகிலிருந்து உதிர்ந்தது மஞ்சள் நிறம்.. வடியும் கனவுகளை ஏந்திக் கொண்டு நிசப்தமாய் உறைந்திருந்தது மனம்.. ஒவ்வொரு கனவினையும் பறவை தன் ஒளியால் உயிர்ப்பித்துக் கொடுத்தது.. யாருக்கும் தெரிவதில்லை இருளைத்திண்ணும் பறவைகள் எப்போதும் வெளிச்சத்தை விரும்புவதில்லையென்பதை..
Continue
Posted by DevarajVittalan on Sep - 23 - 2012

யாரை நேசிப்பதென்று யாரிடம் அன்பு.. செலுத்த வேண்டுமென்று யாரிடம் கருணை காட்ட வேண்டுமென்று.. யாரை புரிந்துகொள்ள வேண்டுமென்று.. யாருடைய கனவுகளை வளர்க்க வேண்டுமென்று.. யாரை போற்ற வேண்டுமென்று..
Continue
Posted by DevarajVittalan on Jun - 18 - 2012

கருவேல மரங்கள், வேப்ப மரங்கள், புளிய மரங்கள், குளங்கள், கண்மாய்கள், அந்த கண்மாயின் அருகிலேயே குடியிருக்கும் அய்யனார் சாமிகள் என அனைத்தையும் வேகமாக கடந்து கொண்டிருந்தது பேருந்து. சும்பப் பய எதுக்கு இந்த வெரட்டு வெரட்டுறான்.. கொல்லையா போகுது , நாதாரிப் பய.. – என தண்டட்டான் அணிந்த கிழவியொருத்தி , பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாக ஓட்டிச் செல்லும் ஓட்டுனரைப் பார்த்து சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.
[ Read More ]Continue