Posted by DevarajVittalan on Apr - 6 - 2012

நேற்றைய இரவில் என் கனவில் வந்து கொண்டிருந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள். ஏனெனில் அவர் நடித்து வெளிவந்த தோனி திரைப்படத்தை நேற்றைய இரவில்தான் பார்த்தேன். மிக மிக எதார்த்தமான நடிப்பால் கண்களை திரையை விட்டு நகர்த்த விடாமல் கட்டிப் போட்டு வைத்திருந்தார். கதையின் கரு இன்றைய அன்றாட வாழ்வில் இருந்து கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனத்தை , பக்தியை, வேதனையை என எவ்வாறு வேண்டுமென்றாலும் கிரிக்கெட்டை நாம் பார்க்கும் பார்வையில் எடுத்துக் கொள்ளலாம்.
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 10 - 2012

மனிதனின் அத்தியாவசிய தேவைகளுள் ஓன்று வீடு – கல்யாணம் பண்ணி பாரு வீட கட்டி பாரு என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழிவழக்கு. அந்த மொழியின் அர்த்தத்தை இந்த திரைப்படமும், வாழ்க்கையும் எனக்கு கற்று கொடுத்த கற்பிதங்களும் மனதில் எண்ண அலைகளை எழுப்பிவிட்டு சென்றது. இந்த பத்தியை எழுதும்போது அஸ்ஸாமில் பனிமழை பொழிந்து கொண்டுள்ளது. சிறிய நடுக்கத்தோடு பின்னிரவில் பத்தியை எழுதி கொண்டு உள்ளேன். நான் கடந்து வந்த வீடு கட்டுதலின்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 9 - 2012

வானில் இருந்து பூமிக்கு ஒரு விசித்திரமான ஓர் பொருள் வருகிறது அது அடர்ந்த காட்டிற்குள் வந்து விழுகிறது. படம் இவ்வாறு தொடங்குகிறது. ஸ்டெல்லா படத்தின் கதாநாயகி.. கல்லூரி ஒன்றில் பாடம் நடத்தி கொண்டுள்ளாள். கல்லூரி முடிந்ததும் கிராண்ட் என்ற ஒருவன் வந்து ஸ்டெல்லாவை அழைத்துக்கொண்டு செல்கிறான். அருகில் இருப்பவர்கள் ஸ்டெல்லாவின் வறுமையான குடும்ப சூழ்நிலைதான் கிராண்ட் போன்ற வயதான ஒருவனை திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் விட்டு விட்டது. என
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 8 - 2012

நகரம் அழகானதுதான் அவற்றை நாம் உன்னிப்பாக அவதானித்து பார்க்காதவரை,.. இந்த ஒரு வரியை அடிநாதமாக வைத்துக் கொண்டு நகர்கிறது சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ். பால்யத்தில் ஞாயிற்று கிழமைகளில் வார வாரம் தூர்தர்சனில் ஒளிபரப்படும் சார்லி சாப்ளினின் நகைச்சுவைக்காக ஏங்கி தவித்த நாட்கள் இன்னும் மனதில் பசுமையாய் உள்ளது. திரையில் சார்லி பல விதமாக சேட்டைகள் செய்து அடி வாங்குவார், அவற்றை கண்டு நண்பர்கள் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்போம். அப்போது
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jan - 3 - 2012

சில காலங்களாகவே தண்ணீருக்கும் எனக்குமான நெருக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. சமீபத்தில் நான் நேசித்து வாசித்த திரு. அசோகமித்திரன் அவர்களின் தண்ணீர் நாவல். அடுத்து மனதை கண்ணீரில் மூழ்க செய்த SILENT WATER திரைப்படம். மத்திய பிரதேசத்தில் உள்ள தண்ணீர் கஷ்டம். அடுத்து நான் பார்க்க வேண்டும் என நினைத்த என் நெடு நாளையக் கனவுத் திரைப்படமான WATER திரைப்படம். பிலிப்ஸ் DVD – யை வாங்கும் போதே இந்த
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 30 - 2011

பால்ய காலத்தில் இருந்தே ராஜேஷ் கண்ணா அவர்களின் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை தற்பொழுதுதான் பூர்த்தி அடைந்துள்ளது. ராஜேஷ் கண்ணா இந்திய சினிமாவின் ஒரு அத்தியாயம். அவரின் திரைப்படங்கள் அன்றைய கால கட்டங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகத்தான் ஓடிக்கொண்டிருக்குமாம் அவ்வளவு ரசிகர்கள். சமீபத்தில் அவதார் என்ற படத்தை பார்த்தேன். அவதார் நிராகரிப்பை சுமந்து திறியும் ஒருவனின் கதை. காதல் நிறைந்துள்ளது, இதே போன்று பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் இந்த
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Dec - 30 - 2011

கதை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஆயிசாவின் உள்ளார்ந்த வார்த்தைகளோடு திரையில் காட்சி விரிகிறது. தனது வாலிப மகன் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ்க்கையை பிடிமானமுள்ளதாக அமைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள் ஆயிசா. ஆனால் சலீம் என்ற அவளது மகனோ எந்த ஒரு பிடிமானமும் இன்றி மறுதலிக்கிறான். இந்நிலையில் சலீம் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவளும் அவனை உயிருக்கு உயிராய் விரும்புகிறாள் . காலம் கழிகிறது பகலும் இரவும் மாறி மாறி வருகிறது ஆனால் ஆயிசாவின்
[ Read More ]Continue