Posted by DevarajVittalan on Nov - 23 - 2019

இரயில் பயணங்கள் எப்போதும் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தையும் , தரிசனத்தையும் தந்துகொண்டுதான் உள்ளது. அரோணி எக்ஸ்பிரஸில் வெஸ்ட்பெங்காளிலிருந்து ஊருக்கு திரும்புகையில் இரண்டாம் வகுப்பில் பயணித்துக்கொண்டிருந்தேன். கோச் முழுவதும் அதீதமான கூட்டம் நிரம்பியிருந்தது. பதின்பருவ இளைஞர்கள்தான் அதிகம் இருந்தனர். அந்தக்கூட்டத்தில்தான் சுதீப்பை சந்தித்தேன். சுதீப் மேற்குவங்கத்தைச்சேர்ந்தவன். பணிக்காக திருவணந்தபுரம் செல்கிறான். அவனோடு பேசியதில் அவனொரு பெயிண்டர் என்பதை அறிந்துகொண்டேன். உயரமான கட்டிடங்களுக்கு வர்ணம் பூச நம்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on May - 23 - 2019

டிஜிட்டல் மையமான இக்காலத்தில் கலை இலக்கிய பண்பாட்டு வெளியில் ஒரு இதழை கொண்டு வருவதென்பது மிகவும் சிரமமான செயல்தான். நிலவெளி என்னும் இதழ் புதிதாய் வெளிவந்துள்ளது என்ற நிலைத்தகவலை முகப்புத்தகத்தில் பார்த்ததும் மனதில் சந்தோசம் பிறந்தது. மதுரையில் மல்லிகை புத்தக கடைக்குச்சென்று நிலவெளியை வாங்கினேன். புத்தகம் அழகான ஓவியத்தை அட்டைப்படமாக கொண்டு அற்புதமான வடிவமைப்போடு இதழ் இருந்தது. தொல்லியல் துறை சார்ந்த விசயங்களை தொல்லியல் அறிஞர்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Jul - 8 - 2017

அம்மா இறந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டது. நாளை அம்மாவின் நினைவுதினம். மனமெங்கும் அம்மாவின் நினைவுகள் நிரம்பியுள்ளது. அப்பா, சில நிமிடங்களுக்கு முன்பு போன் செய்திருந்தார். அவர் நாளை அம்மா இறந்த தினம் என்றார். அவர் குரல் சோகத்தை சுமந்துதான் சொன்னது. பெருந்துயரம் என நான் நினைப்பது உடன் வாழ்ந்த மனிதர்களை இழப்பதுதான் என நினைக்கிறேன். அதுவும் மனதால் ஒன்றிய தம்பதிகளில் யார் பிரிந்தாலும் பெருந்துயரமே. எனக்கு
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Mar - 25 - 2017

மனமெங்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவுகளே நிறைந்திருந்தது.. மரணம் அவர் எதிர்பார்த்துக் காத்திருந்ததுதான் என்றாலும். நம்மால் அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இன்னும் சிறிது நாள் இருந்திருக்கலாம் என்ற ஆசை இருந்துகொண்டே உள்ளது. இன்று அவர் பூத உடல் எரிக்கப்படலாம் ஆனால் அவர் எழுத்துக்கள் உருவாக்கிய சித்திரங்கள் எப்போதும் கடைசித்தமிழன் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை..
Continue
Posted by DevarajVittalan on Mar - 23 - 2017

தமிழின் மிக முக்கியமான ஆழுமையான எழுத்தாளர் அசோகமித்திரன் மறைந்துவிட்டார். அவரது நாவல்கள் தண்ணீர், கரைந்த நிழல்கள் இரண்டையும் படித்துள்ளேன். சென்னை நகரினைப் பற்றி மிக அழகாக தன் எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார்.
Continue
Posted by DevarajVittalan on Dec - 24 - 2014

யாதுமாகி நாவலில் வரும் தேவி கதாபாத்திரம் (தேவிதான் நாவலின் மையம் தேவியை சுற்றிதான் முழு நாவலும் வளர்கிறது) சந்திக்கும் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவை அதுவும் பெண்களுக்கு சமுதாயத்தில் பல கொடுமைகள் நடந்த கால கட்டம், பெண் உரிமைகள் மறுக்கப்பட்ட கால கட்டம் . அத்தகைய சூழலில் பல கட்டுப்பாடுகள் கொண்ட பிராமண சமுதாயத்தில் பிறந்து, நல்ல மனிதர்கள் சிலர் உதவியால் தன் வாழ்க்கையை தனி மனுசியாக நின்று பிரச்சனைகளை எதிர்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Sep - 21 - 2012

சில தினங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக சிம்லா சென்றிருந்தேன் . ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு சிம்லா சென்றிருந்தாலும் அவசரமாய் திரும்ப வேண்டிய சூழ்நிலை உண்டானதால் இயல்பாய் இருந்து, தங்கி சுற்றிப் பார்க்க இயலவில்லை. எப்போதுமே மலைப்பயணம் சந்தோசமளிக்க கூடியது. இப்போது மலையோடு, மழைப்பயணம் என்றால் சொல்லவேத் தேவையில்லை. சிம்லாவில் இப்போது மழைக்காலம். மழைத்தூரலோடு மலையைச் சுற்றுவது மகிழ்ச்சியான தறுணம்.. அந்த அழகிய காட்சியை இப்படி வர்ணிக்கலாம் விரித்துப் போட்ட
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Aug - 30 - 2012

நேற்றைய மாலை அலுவலக வேலைகள் முடிந்த பின் , மொட்டை மாடிக்குச் சென்று , படுத்துக் கொண்டே ஆகாசத்தை பார்த்தேன். மனது சந்தோசப்பட்டது, ஒரு அமைதி உருவானது. பால்யத்திலிருந்தே ஆகாசம் எனக்கு மிகவும் உவகை தருவதாகவே இருந்து வருகிறது. வெள்ளை மேகங்கள் பறந்து செல்வதும், ஏதோ ஒரு இடத்தில் ஒன்று சேர்வதும், பின் மீண்டும் கலைந்து செல்வதும் பின் மீண்டும் ஒன்று சேர்வதுமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்று சேரும்
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Aug - 20 - 2012

நேற்று மாலை எனது நண்பனை சந்தித்தேன். எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவன் சிறிது கலக்கமடைந்திருந்தான், ஏண்டா மச்சான் என்ன ஆச்சு என கேட்டதற்கு, அதெல்லாம் ஒன்னுமில்ல மச்சான்னு கூறிக் கொண்டே என் காதில் வந்து மச்சான் வாழ்க்கையில முதன்முதலா சிகரெட் அடுச்சு கேவலப்பட்டுட்டண்டா என்றான், என்னடா மச்சான் சிகரெட் அடிக்கிறதெல்லாம் கேவலமாடா என்றேன். எனக்கு சிகரெட்டுக்கும் ராசியே இல்ல மச்சான் , நான் சின்ன வயசுல இப்படித்தான் ஒரு தடவ
[ Read More ]Continue
Posted by DevarajVittalan on Aug - 16 - 2012

நீண்ட நாட்களுக்கு பிறகு எனது சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். ஊரில் உள்ள மனிதர்களின் சுபாவம் மாறினாலும் எப்போதும் மாறாமல் இருக்கிறது அந்த இயற்கை. எனது ஊர் பசுமையான பகுதி அல்ல , இருப்பினும் அங்கே அடிக்கும் வெய்யிலும், காற்றும் அலாதியானது. இந்தியாவில் எங்கெங்கோ சுற்ற வாய்ப்பு கிடைத்தாலும் , பிறந்த ஊரின் வெய்யிலையும், காற்றையும் எங்கும் நான் அனுபவித்ததில்லை. மதுரையில் உள்ள மேற்கு மலைத்தொடர்களின் அடிவாரத்தின் அருகில் இருக்கிறது எனது ஊர்.
[ Read More ]Continue